Saturday, November 30, 2019

CGHS









நெல்லையில்
AIBSNLPWA...
சார்பில் நினைவு அஞ்சலி .
*******

கும்பகோணத்தில் நடந்த பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு வரும் வழியில் திருச்சியில் அன்பு மகள் வீட்டில் திடீர் சுகவீனம் காரணமாக  26 11 2019 அன்று  இயற்கை எய்திய நமது அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கத்தின் அகில இந்திய துணை செயலாளரும் நெல்லை மாவட்ட சங்கத்தின்  மாவடட செயலாளருமான
தோழர்  அருணாச்சலம் அவர்களுக்கு சார்பில் நடந்த நினைவு அஞ்சலி...



மதியம் ஒரு மணிக்கு மாநிலத் தலைவர் ரமாராவ்அவர்கள் தலைமையில் நடந்த நினைவஞ்சலியில் அகில இந்திய சங்கத்தின் சார்பில்  தோழர் முத்தியாலு, மாநிலச் சங்கத்தின் சார்பிலே தோழர் ஆர்.வெங்கடாசலம் ,
அகில இந்திய சங்கத்தின்  தலைவர், செயலாளர்
சார்பாக தோழர் D.கோபாலகிருஷ்ணன் ,  தூத்துக்குடி தோழர் அம்பிகாபதி,
 மதுரை தோழர் G.R.தர்மராஜ் ,நெல்லை மாவட்ட ஓய்வூதியர்
கூட்டமைப்பின்  செயலரும் , அஞ்சல் பகுதி ஓய்வூதியர்சங்கத்தின்  செயலருமான தோழர் சண்முகசுந்தரராஜ், நெல்லை மாவட்ட சங்கத்தின்  தலைவர் சம்மனசு ஆகியோர் தங்கள் நினைவுகளை கண்ணீரோடு பகிர்ந்து கொண்டனர் . அங்கிருந்த அனைவரையும் நெஞ்சை நெகிழ வைத்தது.
இரங்கல் கூடடத்தில்  பேசிய அனைத்து தலைவர்களும் தொலைபேசித் துறையில் இயக்குனராக பணி தொடங்கி காலத்தில் இருந்து  சங்கத்தின் உறுப்பினராய் கிளைச் செயலாளராய் மாவட்ட செயலாளராய் மாநிலச் சங்க நிர்வாகியாய்அகில இந்திய நிர்வாகியாய் அவரது  தொழிற்சங்க வரலாற்றில் தொடக்கத்தில் இருந்து நேற்றுவரை அவர் ஆற்றிய  பணி மகத்தானது .
ஈடு இணை இல்லாதது என புகழ்ந்தார்கள்
👌அவருடைய நேர்மை
👌அவருடைய எளிமை
👌 அவருடைய பணிவு
👌எது நடந்தாலும் அமைதிகாக்கும் மனச் சமநிலை
👌எல்லோருக்கும் ஓடி ஓடி உதவிடும் மாண்பு
👌பிஎஸ்என்எல் பணியாளர் மட்டுமன்றி பிறதுறை களின் தொழிற்சங்கம் சார்ந்த அனைத்து அரசு விதிகளையும் நன்கு அறிந்து பிறருக்கு புரியும் வகையில் எளிதாக விளக்குகின்ற ஒரு பேராற்றல் கொண்டவர் என்றும் சிறப்பித்தார்கள்.

 பிஎஸ்என்எல் பணியாளர்கள், ஓய்வூதியர்கள் இல்லங்களில் நடக்கின்ற அனைத்து விழாக்களிலும்  தவறாமல் கலந்து சிறப்பிப்பது இவர் வழக்கம்.
 மாதம் தன்னுடைய சொந்த ஓய்வூதியத்தில் உத்தேசமாக 5 ஆயிரம் வரை செலவழித்து தினமும் அலுவலகத்திற்கு வருவதுபோல் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள நம்முடைய AIBSNLPWA  மாவட்ட சங்க
நெல்லை வண்ணார்பேட்டை  அலுவலகத்திற்கு வந்து காலையிலிருந்து மாலை வரை அனைத்து பணிகளையும் அவரே தம் கைப்பட செய்ததை எல்லோரும் நினைவு கூர்ந்தார்கள்.

 அதுவும் குறிப்பாக
பொதிகை தென்றல் இதழினை வடிவமைப்பதில் வெளிக்கொண்டு வருவதில் அவருடைய முத்தாய்ப்பான செயல்களை எல்லோரும் பாராட்டினார்கள்.
இவரின் கடும் முயற்சியில் இரண்டு தினங்களுக்கு முன்னால் தோழர் D.G அவர்களின் அணிந்துரையுடன் நமது AIBSNLPWA மாநில சங்கம் சார்பில்  வெளிவந்து பலரின் பாரட்டினை பெற்ற மத்திய அரசு மருத்துவ  உதவி திடடம் பற்றிய கை ஏடு பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார்கள்.
மெய் வருத்தம் பாராமல்
பசி நோக்காமல்
கண் துஞ்சாமல்
இமைப்பொழுதும்
சோராது
பொது நலப் பணி ஆற்றிய தோழர் அருணாச்சலம் அவர்களுக்கு
 நாம் காட்டுகின்ற நன்றி அவர் விட்டுச் சென்ற பணியை தொய்வில்லாமல் மிக நேர்த்தியாக செய்வதாக எல்லோரும் சபதம் எடுத்துக் கொண்டார்கள் .

Tuesday, November 12, 2019

Mode Of Submission Of Life Certificate


I. Submission of Life Certificate at any Branch of SBI
1. Manually - Life certificate can be summited in physical format

2. Digitally: - Visit any Branch of SBI. Provide Aadhaar number, Mobile number, Pension Payment Order(PPO) number & Account number. Then provide biometrics (Fingerprint). On successful Aadhaar based biometric authentication, Jeevan Pramaan will be generated with a unique id called Pramaan Id as acknowledgement.

II. Submission of Life Certificate Digitally through https://jeevanpramaan.gov.in using own PC/Laptop/Mobile


III. Submission of Life Certificate Digitally through GoI UMANG App on Mobile

Pensioner have to download UMAMG app from google play store, search Jeevan Pramaan and click on generate life certificate. Pensioner Authentication page will open. Required information to be feeded for generation of DLC.

IV. At Citizen Service Centre (CSC) / Aadhar Seva Kendra

Visit nearest CSC or Aadhaar Seva Kendra. Provide Aadhaar Number, Mobile Number, Pension Payment Order(PPO) number, Account number & name of Pension Sanctioning Authority. Then provide biometrics (Fingerprint). On successful Aadhaar based biometric authentication, Jeevan Pramaan will be generated with a unique id called Pramaan Id as acknowledgement.

Note: - If pensioner is re-employed or family pensioner is re-married, life certificate can be provided only in physical format.


LIFE CERTIFICATE PENSION AND TELEPHONE


உயிர் வாழ்  சான்றிதழ்

தோழர்களே,
நாம் ஓய்வூதியம் பெறுகின்ற  வங்கிக் கிளை அல்லது தபால் நிலையத்தில் நாம்  உயிர் வாழ்  சான்றிதழை நவம்பர் மாதம் அவசியம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் டிசம்பர் மாத ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் ஏற்படும் . இந்தியன் வங்கி அனுப்பியுள்ள எஸ்.எம் எஸ் பிரகாரம் நம்முடைய ஆதார் மற்றும் பாண் கார்ட் ஒரிஜினல் மற்றும் செராக்ஸ் காப்பி  வங்கி  பாஸ் புத்தகம் கொண்டு செல்ல வேண்டும் .உயிர் வாழ் சான்றிதழை கொடுத்துவிட்டு வங்கியாளர் பெற்றுக்கொண்தற்கான ஒப்புகை சீட்டு கேட்டுப் பெறவும். கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கவும்.
மேலும் நாம் வாடகையில்லா தரை வழி தொலைபேசி சர்விஸ் கனெக்சன் வைத்திருக்கிறோம். அங்கேயும் நாம் உயிர் வாழ்  சான்றிதழை இந்த நவம்பர் மாதத்திற்குள் கொடுக்க வேண்டும். இல்லையெனில் தொலைபேசிக்கு வாடகை கட்ட வேண்டியிருக்கும்.இலவச அழைப்புகளை இழக்க வேண்டியிருக்கும். PPO புத்தகத்தை எடுத்துச் சென்றால் பத்திரமாக வீட்டிற்கு கொண்டுவரவும்


CGHS–NON COVERED AREA PENSIONERS


CGHS–NON COVERED AREA PENSIONERS 



தமிழ்நாடு CGM அலுவலகத்திலிருந்தும் CGHS SURRENDER CERTIFICATEக்கான உத்தரவுகள் நேற்று வெளியாகி விட்டது. ஏற்கனவே STR, STP, CHTD பகுதிக்களுக்கும் இந்த உத்தரவுகள் வெளியாகி விட்டது.
எனவே தமிழ்நாட்டின் அனைத்து பகுதியில் உள்ள STR, STP, TN ல் பணிபுரியும் அனைவரும் இனி CGHS CARD க்கு விண்ணப்பிக்கலாம். 
                                                                                                                                                                                   
அவர்களுக்கான சில விளக்கங்களை கீழே கொடுத்துள்ளோம். 
                                                                                                             1.
தற்போது சென்னை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய இடங்களில் மட்டுமே CGHS அலுவலகங்கள் உள்ளன. அந்த பகுதியில்  உள்ளவர்கள் அங்கு CGHS CARD பெற்றுக்கொள்ளலாம்.   
2.
இந்த இடங்களில் இல்லாத CGHS NON COVERED AREA  வில் உள்ளவர்களும் CGHS CARD பெறலாம். அவர்கள் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள ஏதாவது ஒரு CGHSஐ தேர்ந்தெடுத்து அதில் சேர்ந்து CGHS CARD பெற்றுக் கொள்ளலாம்.
3. CGHS NON COVERRED
பகுதியில் உள்ளவர்களுக்கு மட்டும் ஒரு OPTION உண்டு.
4.
அவர்கள் அவுட்பேஷண்ட் ட்ரீட்மென்ட்இன்பேஷன்ட் இரண்டும் வேண்டும் என்று சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.   
5.
அல்லது அவுட்பேஷன்ட் ட்ரீட்மென்ட் வேண்டாம், இன்பேஷன்ட் ட்ரீட்மென்ட் மட்டும் போதும் என்று கேட்டு விருப்பம் கொடுக்கலாம். அப்படி விருப்பம் கொடுக்கும்போது விண்ணப்பப் படிவத்தின் மேலே “FOR INPATIENT TREATMENT ONLY” என்று எழுதி, எந்த ஊரிலுள்ள CGHS வேண்டும் என்றும் குறிப்பிட வேண்டும்.  
6.
அவுட்பேஷன்ட் ட்ரீட்மென்ட் வேண்டாம் என்பவர்களுக்கு FMA உண்டு. ஆனாலும் அவர்களுக்கு இன்பேஷன்ட் ட்ரீட்மென்ட் பெற தகுதி உண்டு. 
7.
அவுட்பேஷன்ட் ட்ரீட்மென்ட்டு வேண்டும் என்பவர்களுக்கு அவர்களது CGHSல் 3 மாதங்களுக்கான மருந்து மாத்திரைகளைப் பெற்றுக் கொள்ளலாம். 
8.
இந்த சலுகைகள் CGHS NON COVERED AREA வில் உள்ள BSNL PENSIONERகளுக்கு மட்டுமே பொருந்தும். 
9. CGHS CARD 
பெறுவதற்கான வழிமுறைகள் COVERRED AREA, NON-COVERRED AREA இருவருக்கும் பொதுவானவையே.
10.
எனவே CGHS NON – COVERRED AREA வில் உள்ள STP, STR, TN பென்ஷனர்கள் மேல் சொன்ன விஷயங்களை கவனத்தில் கொண்டு ஒரு நல்ல முடிவை அவர்கள் மேற்கொள்ள வேண்டுகிறோம். 


Friday, August 16, 2019

BSNL / MTNL ஓய்வூதியர்களே, உங்களின் நண்பர்களை தேடுங்கள்


தாங்கள் சார்ந்திருக்கின்ற இயக்கத்திற்கு அப்பாற்பட்டு, யார் சரியானவர்கள், யார் ஓய்வூதியர்களின் நலனைப் பாதுகாக்க உள்ளவர்கள் என்பதை ஓய்வூதியர்கள் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
      பென்சன் மாற்றத்தில் 2007-ல் நமக்கு ஏற்பட்ட அனுபவத்தை பின்னோக்கிப் பார்ப்போமானால், பென்சன் மாற்றத்திற்கு ஒரு நிரந்தர தீர்வு காண, BSNL IDA பென்சனர்களுக்கு 7-வது மத்திய சம்பளக் குழு பரிந்துறைத்த பிட்மெண்ட் படி பென்சன் மாற்றத்தை நாம் கோரினோம். நாம் இந்த விசயத்தில் நமது நிலைபாட்டில் உறுதியாக உள்ளோம்.. அதைப்போல, மற்ற ஓய்வூதியர் சங்கங்களும் அவர்களின் புரிதல்படி அவர்களின் கோரிக்கையை வைக்க உரிமையுண்டு. பென்சனர் கூட்டமைப்பில்   AIBSNLPWA-வைத் தவிர்த்து அதில் உள்ள சங்கங்கள் ஆரம்பத்தில் 3-வது சம்பளக்குழு பரிந்துரைத்த அடிப்படையில் பென்சன் மாற்றம் 15 சதவீத அளவில் அதிகாரிகளுக்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். 7-வது சம்பளக்குழு பரிந்துரையில் உள்ள பிட்மெண்ட் காரணியை  பிறகு தான் புரிந்துகொண்டார்கள். பென்சனர்களின் நலத்திற்கு மட்டுமே தாங்கள் பாடுபட வேண்டிய உண்மைத் தன்மையை, அவசியத்தை அவர்கள் உணர்ந்தார்கள்..  தற்போது கூட்டமைப்பில் உள்ள எட்டு சங்கங்களும் பென்சன் மாற்றத்தில் ஒத்த கருத்தை உடையவர்களாக உள்ளனர். நாம் இந்த கோரிக்கையில் அனைவரும் இணைந்தும், கூட்டாகவும் செயல்பட்டு வருகிறோம்.  இந்த கூட்டு பேர சக்தியை அதிகரிக்க எண்ணி, மற்ற 3 சங்கங்களையும் இணைந்து செயல்பட அழைத்தோம். AIBSNLREA இதற்கு செவி சாய்க்காமல் மெளனமாக இருந்தார்கள். AIBDPA ( நம்பூதிரி சங்க இணைப்பு ) தங்களுக்கு நம்முடைய மின்னஞ்சல் கிடைக்கவில்லை என்றார்கள். 10 நாட்கள் கழித்தும் அந்த மின்னஞ்சல் பட்டுவாடா ஆகவில்லை என்ற தகவல் வரவில்லை. ஆனால், நம்முடைய முன்மொழிதலை பார்த்திருக்கிறார்கள். நல்லது.  அவர்களுடைய வெப்சைட்டில் 07-08-2019 அன்று இப்பிரச்சனையைப் பற்றி தெரிவித்திருக்கின்றனர் :

அவர்களின் கடிதத்தில் 2-வது பத்தியில், “ சம்பளமாற்றத்துடன் இணைக்காமல் 01-01-2007 முதல் பென்சன் மாற்றத்தை 15% பிட்மெண்ட்படி தரவேண்டும் என கோரியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். மத்திய பொதுத்துறை நிறுவன அதிகாரிகளுடைய சம்பள மாற்றத்தை 2-வது சம்பள மாற்றக்குழு பரிந்துரைத்த 30% பிட்மெண்ட்படி   IDA அளவீட்டில் 01-01-2007 முதல் பென்சன் மாற்றத்தை பெற்றோம். ஒவ்வொரு சம்பள மாற்றத்தின் போதும் எதிர்வரும் பென்சன் மாற்றத்தை சம்பளக்குழு பரிந்துரைத்த அதிகபட்ச பிட்மென்ட்டைப் பெற, இதை ஒரு முன்னுதாரமாக உருவாக்கியுள்ளோம்”.

இந்த முன்னுதாரணத்தை குறிப்பிட்டால், அடுத்த சம்பள மாற்றம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். மேலும் சம்பள மாற்றத்தோடு இணைக்கக்கூடாது என்று கேட்க முடியாது. 01-10-2000 முதல் 31-12-2016 வரையிலான காலத்தில் ஓய்வுபெற்ற BSNL IDA  பென்சர்களின் பென்சன் மாற்றப் பிரச்சனை  BSNL-ன் சம்பளமாற்றத்தை ஒட்டியே  01-01-2007 முதல்  தர பரிசீலனையில் உள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது (15-03-2011 தேதியிட்ட DOT உத்தரவின்,  பத்தி- 2-ல் 01-01-2007 முதல் பென்சன் மாற்றம் செய்ய வெளியிடப்பட்ட உத்தரவு)
பத்தி-4.ல் அவர்கள் சொல்வது “ 01-01-2016 முதல் CDA சம்பள விகிதத்தில் பென்சன் பெறவும், பிறகு வரும் பஞ்சப்படியை CDA–வாக பெறவும் வழிமுறை செய்ய ஒரு மாற்றல் கொள்கை உருவாக்கப்படவேண்டும். அவ்வாறான ஒரு கோரிக்கையை எழுப்புவது தற்கொலைக்கு சமம், மற்றும் பென்சனர்கள் நலனுக்கு குந்தகமாக அமையும் “

01-01-2016 முதல் CDA சம்பள விகிதத்தில் பென்சனை நாம் கோரவில்லை. தற்போதைய IDA அடிப்படை பென்சனை 01-01-2016 முதல் CDA பென்சனாக மாற்றவேண்டும் என்பதே நமது திட்டம். இந்த மாற்றம் CDA சம்பள விகிதத்தில் கோரவில்லை. இரண்டும் வெவ்வேறானது. நம்முடைய முன்மொழிதல் எந்த வகையில் பென்சனர் நலனுக்கு குந்தகம் எனவும் விளக்கப்படவில்லை.
பத்தி-6.ல் அவர்கள் சொல்வது:  “ எதிர்காலத்தில் சம்பள மாற்றம் என்று இருக்கப்போவதில்லை என்ற காரணத்தைக் காட்டி CDA பென்சன் மாற்றம் கோருவதான வாதம் சரியல்ல “

    எதிர்காலத்தில் சம்பள மாற்றக்குழு இருக்காது என நாம் சொல்லவில்லை.  2027-வாக்கில், BSNL-ல் இணைந்த ஊழியர்கள் அனைவரும் ஓய்வுபெற்றுவிடுவார்கள். அதனையொட்டியே 2027-ல் BSNL-ல் சம்பள மாற்றம் என்பது பொருத்தமற்றதாகிவிடும், அதன் காரணமாக பென்சன் மாற்றம் சம்பளமாற்றத்தோடு இணைத்தல் தேவையில்லாததாகிவிடும். அவர்களின் கூற்று உண்மையை திரித்து கூறுவதாகும். அவர்களுடைய சங்கத்தைச் சார்ந்த சிலரை குழப்பலாம், மற்றவர்களை குழப்ப முடியாது.

பத்தி-7.ல் அவர்கள் சொல்வது:   “அடிப்படை கோரிக்கையான பென்சன் மாற்றத்திற்கு தீர்வு காண, சிக்கலான இந்த காலகட்டத்தில் இந்த கோரிக்கையின் மீது எவ்வளவு போராட்டங்களை சங்கங்கள் நடத்தியது என்பதை நினைவுபடுத்துகிறோம்.  AUAB–ன் 3 நாள் வேலைநிறுத்தம், தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தியதால் சம்பள மாற்றத்திலிருந்து பென்சன் மாற்றம் என்பதை இணைக்கக்கூடாது என்ற நிலைபாட்டை அரசு எடுத்தது “
சம்பள மாற்றத்திலிருந்து பென்சன் மாற்றம் என்பதை மாற்ற அரசு முடிவு செய்யவில்லை என்பதே இப்பிரச்சனையின் உண்மையாகும். கடந்த    03-12-2018 அன்று துறை அமைச்சர் மனோஜ் சின்காவை AUAB சந்தித்தது. அந்த கூட்டத்தில் இணைப்புதன்மை இல்லாத இப்பிரச்சனையை ஒப்புதலுக்காக பென்சனர் மற்றும் பென்சனர் நலத்துறைக்கு ஏற்கனவே அனுப்பிவிட்டதாக DOT அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பிரச்சனையை துரிதப்படுத்தும்படி அதிகாரிகளை அமைச்சர் வலியுறுத்தினார்.  இந்த கோப்பு இன்னும்  DOT- க்கும் & பென்சனர் நலத்துறைக்கும் இடையே இந்த இணைப்பு தேவையில்லை விசயத்தில், யார், எந்த துறை முடிவெடுப்பது என்ற முடிவில்லாமல் கோப்புகள் போகிறது , வருகிறது, செல்கிறது என்ற நிலையில்தான் உள்ளது. 

அழையாத அலோசகரிடமிருந்து அமைச்சருக்கு மோசமான கடிதம்:

“ BSNL பென்சனருக்கு பென்சன் மாற்றத்தை 01-01-2017 முதல் 3-வது சம்பளக் கமிசன் பரிந்துரையின்படி மாற்றம் செய்ய, ( BDPA,  FNTO  சார்பு சங்கம்) பொதுச் செயலர் திரு.D.D.மிஸ்டிரி, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு 06-07-2019 அன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் 22 பத்திகள் கொண்டுள்ளது. அதை அச் சங்கத்தின் வெப்சைட்டிலும், இதழிலும் வெளியிட்டது. அவர்களின் கோரிக்கையை  நியாயப்படுத்தும் வகையில் எழுதாமல், 7-வது   சம்பளக் கமிசன் பரிந்துரைபடி பிட்மெண்ட் செய்ய நாம் கோரியதை கடிதம் முழுக்க நம்மை சாடியிருக்கிறார்.  அக்கடிதத்தின் உள்ளே உள்ள தட்டச்சு பிழைகள், சரியான நிலைபாடின்மை ஆகியவற்றைப் பற்றி குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், அக்கடிதத்தின் நஞ்சுத் தன்மையை விவரிக்காமல் இருக்க முடியாது.
அக்கடிதத்தின் பத்தி-2 : “ அனைத்து கட்சி அரசியலையும் தவிர்த்தும் கம்யூனிஸ்ட் சங்கங்கங்களை அழைத்து கூட்டம் நடத்தாமல், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சரின் ( திரு.பிரல்காத் ஜோஷிஜி) சிபாரிசின் பேரில் கடந்த 01-07-2019 அன்று பென்சனர் சங்கத்தை (  AIBSNLPWA / CBMPA   ) அழைத்து அதிக நேரம் தங்களுடைய பொன்னான நேரத்தை செலவழித்திருக்கிறீர்கள் “.

அக்கடிதத்தின் பத்தி-4. : ” இவ்விசயத்தில் 7-வது மத்திய சம்பளக் கமிசன் பரிந்துறைப்படி 01-01-2017 முதல் பென்சன் மாற்றத்திற்கு பல பொருத்தமற்ற தகவல்களை தந்து நியாயப்படுத்தியதை தங்களுடைய பார்வைக்கு கொண்டு வருகிறோம் “.

அக்கடிதத்தின் பத்தி- 15:   “ தங்களூடைய அரசியல் ரீதியிலான உந்துதலால், சங்கங்கள் சம்பள மாற்ற பேச்சுவார்தையை தடுத்து நிறுத்தி அதற்கு முற்றுப் புள்ளி வைத்தனர்”.

அக்கடிதத்தின் பத்தி- 16:  ” சம்பள மாற்ற பேச்சுவார்த்தையை மறுபடியும் துவக்க கோராமல். இந்த சங்கம் ( AIBSNLPWA ), 7-வது மத்திய சம்பளக் கமிசன் பரிந்துறைப்படி பென்சன் மாற்றக் கோரிக்கையை தன்னுடைய பத்தி-10 மூலம் வலியுறுத்தியது.  இக்கோரிக்கை எதார்த்தமானது அல்ல என்பதை நாங்கள் திடமாக நம்புகிறோம்.”

சம்பள பேச்சுவார்த்தை சேவையில் உள்ள சங்கங்களின் உரிமையான ஒன்று;     அதில் எங்களது பங்கு ஒன்றுமில்லை;

துறை அமைச்சர் அவர்களுக்கு நாம் எழுதிய கடிதத்தின் பத்திகள் -11, 12, 15,16 ஆகியவைகளை குறிப்பிட்டு சம்பந்தமில்லாதவைகளை பேசுகிறார்  --    மிஸ்டிரி.  மேலும் நம்முடைய கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டாம் என துறை அமைச்சரை கேட்டுள்ளார். அவர்களின் எழுத்துக்களுக்கு எந்த பதிலும் தர வேண்டியதில்லை, அதை இகழ்ச்சியாகவே கருதுவோம்.
தங்களுடைய சங்கம்  (BDPA (FNTO) சரியான பாதையில் அழைத்துச் செல்கிறதா என்பதை அச்சங்க உறுப்பினர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். அனைத்து வகையான நிறங்கள், அரசியல் பார்வைகள் கொண்ட உறுப்பினர்களின் அமைப்பாக  AIBSNLPWA விளங்குகிறது.  இதே தோழர்,   மிஸ்டிரி ஆரம்ப கட்டத்தில் இச் சங்கத்தில் இணைந்திருந்தார். அதிலிருந்து தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக நமது சங்கத்திலிருந்து விலகினார்.
கம்யுனிச கொள்கையுடைய  BSNLEU, NFTE-BSNL தலைவர்களை சந்திக்க கூடாது என அமைச்சர்களுக்கு ஆலோசனை தருவாரா இந்த மிஸ்டிரி ?

அழைக்கப்படாத, கேட்காமல் ஆலோசனைகளை தருபவர், அமைச்சர்களுக்கும் அல்லது இந்திய பிரதமருக்கும், அல்லது ரஷ்ய பிரதமருக்கும் அல்லது அமெரிக்க சனாதிபதிக்குக் கூட அள்ளி வீசுவார் ஆலோசனைகளை!  யார் அவைகளை தடுக்க முடியும் ?

                                                                     =  P.S. ராமன் குட்டி, அகில இந்தியத் தலைவர்


தமிழாக்கம்:   த.அன்பழகன், மாவட்டச் செயலர், புதுச்சேரி



தஞ்சையில் ஓய்வூதிய மாற்றம், MRS மற்றும் இன்றைய BSNL என்ற தலைப்பில் சிறப்பானதொரு விளக்கவுரையினை அகில இந்திய துணைத் தலைவர் தோழர் D.G அவர்கள் ஆற்றினார். அவருடைய ஆடியோ பதிவு


Sunday, August 11, 2019

நமது சங்கம் முன் வைத்த IDA to CDA கோரிக்கைக்கு AIBDPA சங்கம் தந்த மறுப்புரை.

PENSION REVISION - PROPOSAL ON CDA SCALES DETRIMENTAL TO THE INTEREST OF BSNL PENSIONERS


It has appeared in some WhatsApp groups that certain pensioners associations of BSNL/MTNL have given a proposal for BSNL pension revision due from 01-01-2017 be done on CDA pay scales with effect from 01-01-2016. These organizations are reported to have sent letters to other pensioners organizations, including AIBDPA, for a unified stand. Though AIBDPA has so far not received any such letter, as it had been widely circulated, we think that it has to be responded.
As far as All India BSNL DOT Pensioners Association is concerned, it has taken a principled and rationale stand, beneficial to the pensioners, from the very beginning. We have put forward the demand of pension revision with 15% fitment from 01-01-2017, delinking pay revision. There is no doubt that BSNL pensioners are covered under CCS(Pension) Rules, 1972. But with the formulation of Rule 37A ,BSNL retirees  are ensured pension on IDA pay scales.. Accordingly we got our pension revised from 01-01-2007 on IDA scales with 30% fitment, recommended by the 2nd PRC for the pay revision of executives in CPSUs. Thus, a precedence is created for future pension revision with the criteria of  maximum fitment recommended by the PRC.
Unfortunately, All India BSNL Pensioners Welfare Association had been demanding pension revision on 7th Pay Commission fitment from 01-01-2017. What is the reality?  BSNL retirees are not eligible for 7th CPC fitment as we are covered under Rule 37A of the CCS (Pension) Rules, 1972. They had stated that their serious concern on the future of BSNL has made them to raise such a demand. And they had also pointed out that if there is no pay revision in BSNl, how could there be pension revision.  Of course, it is a fact that BSNL is in a serious crisis due to pro-private policy of the government and also it is noteworthy that serious and united struggles are being waged by all the unions and associations of BSNL against such attacks. With the constant struggles, the employees organizations could resist the government from disinvesting a single share of BSNL.
We had apprehended the adverse impact of the demand of 7th CPC fitment that ultimately, it will end in pension revision on CDA scales, if at all the government accept it. AIBPWA had strongly refuted it and had asserted that their demand is only on IDA scales. But, the revised/ modified proposal has revealed beyond any doubt that it is on the CDA scales with effect from 01-01-2016. And a conversion formula is also formulated to regulate the pension on CDA scales from 01-01-2016 with future dearness allowance on central DR.  It will be suicidal to raise such a demand, detrimental to the interests of the pensioners.
The main reason attributed for such a proposal by these friends is reported to be their concern about  the future pensioners. There can’t be any dispute on the fact that the main stake holders of the future pensioners are the serving unions. And the united body of these serving employees unions, both executives and non-executives, AUAB, has put forward in uncertain terms, that the pension revision should be with 15% fitment from 01-01-2017, delinking wage revision vide AUAB letter No.UA/2019/68 dated 31-01-2019 addressed to Secretary, DoT.  AUAB again through it’s letter No.UA/2019/89 dated 21-05-2019 has demanded the Secretary, DoT to send a concrete proposal to this effect , to the Department of Pension & Pensioners Welfare for pension revision.
Another argument for demanding CDA pension revision is stated to be that there may not be any PRC in future. It is true, that there is no guarantee either for PRC or for that matter CPC. And in the present political scenario, can anybody assure that pension will be safe and pension revision automatc, particularly in the wake of provision in the PFRDA that any pension system could be brought in the ambit of NPS. ?
It should be remembered that the involvement and the struggles by the serving unions is very crucial in the settlement of such a basic demand of pension revision. The continuous struggles including the three days strike by AUAB has compelled the government to delink pension revision from wage revision.
AIBDPA welcome united movement of the pensioners organizations for settlement of the genuine demands of pensioners issues. But it should be for a realistic and logical demand and not for a disastrous demand. Therefore we appeal all the pensioners organizations to join together for pension revision with 15% fitment from 01-01-2017, delinking wage revision, for which AUAB is on serious struggles. So let us join these struggles and achieve our genuine demand.





10.08.19 அன்று சங்க அமைப்பு தின சிறப்புக் கூட்டம் தலைவர் K .R . சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். D.அன்பழகன்மாவட்டச் செயலர் வரவேற்புரையாற்றினார் .தன்னுடைய வரவேற்புரையின் போது புதுச்சேரியில் நிரந்தர ஊழியர்கள் 260 பேர் தான் உள்ளனர். ஆனால் நமது ஓய்வூதியர் சங்கத்தில் 302 பேர் சேர்ந்து அதிகம் பேர் சேர்ந்துள்ள முதன்மைச் சங்கமாக உள்ளது. செயல்பாட்டினால் உறுப்பினர் சேர்வது மற்றவர்களுக்கு கண்  உறுத்துகிறது. நிர்வாக மும் மிரளுகிறது. நம் மால் உருவாக்கப்பட்ட பென்சனர் குறைதீர்வுக்குழுவில்மாற்றுச் சங்கமும் கலந்து கொள்ள வழி செய்திருக்கிறோம். அகில இந்திய துணைத் தலைவர் A. சுகுமாறன் தனது சிறப்புரையில் CDA பென்சன் கோருவதால் ஏற்படும் சாதக பாதகங்களை புள்ளி விபரத்துடன் எடுத்துரைத்தார். அனைத்து சங்கங்களும் கூட்டாக செயல்படகோரிக்கை வைக்க அழைத்ததற்கு மாற்றுச் சங்கம் (AIBDPA) வரவில்லை .மாறாக
        நமது கோரிக்கை பேரழி வானது என்றனர். தற்போது நமது கோரிக்கை ஏற்கப்பட்டால்இனிமேல் BSNL சம்பளமாற்றம் பற்றி கவலைப்பட தேவையில்லைஅடுத்தடுத்த மத்திய சம்பளக் கமிஷனில் தானாக பென்சன் மாற்றம் கிடைக்கும் என்றார். மாநிலச் செயலர் RVபேசுகையில் பென்சன் பிரச்சனையில் நமது சங்கம் மட்டுமே அதிக பிரச்சனைகளை தீர்த்து வருகிறது. அதன் மூலம் அதாலத்திற்கு தரும் குறைகள் குறைந்து வருகின்றன. பிரச்சனைகளை தேடி எடுத்து தீர்வு காண விழைகிறார் மாவட்டச் செயலர் அன்பழகன். அவரின் செயல் பாராட்டத்தக்கது. அது மட்டுமல்ல அகில இந்திய செய்திகளை தமிழாக்கம் செய்து மற்ற மாவட்டங்களிடம் பாராட்டு பெறுகிறார் அன்பழகன். அவருக்கு மாநிலச் சங்கத்தின்  வாழ்த்துக்கள். மருத்துவ பட்டுவாடா இனிமேல் BSNL -ல் கிடைப்பது கஷ்டம். அதனால் CGHS மருத்துவ வசதி பெறுவது நல்லது. அதற்கான முயற்சியில் மத்தியமாநிலச் சங்கம் முயற்சி எடுத்து வருகிறது. மாநில அமைப்புச் செயலர் M.சாம்பசிவம் பேசுகையில் சில அதிகாரிகள் கூட்டு சேர்ந்து நம்மை எதிர்க்கிறார்கள். நமது ஒற்றுமையை கண்டு குறுக்கு வழியில் பிரச்சனை ஏற்படுத்து கின்றனர் என்றார்.

ஆயுள் சந்தா உறுப்பினர் அடையாள அட்டைகளை உறுப்பினர்களுக்கு மாநிலச் செயலர் வழங்கினார்.

புதிய உறுப்பினர்கள் சால்வை போர்த்தி கெளரவப்படுத்தப்பட்டனர். ஆயுள் சந்தா உறுப்பினர் எண்ணிக்கை 303 ஆனது. அனைவரும் கை தட்டி வரவேற்றனர்.
பொருளாளர் R. லோகநாதன் நன்றி கூறினார்.
கூட்ட முடிவில் அனைவருக்கும் சாப்பாடு வழங்கப்பட்டது.





Thursday, July 25, 2019

நாடாளுமன்ற அவையில் BSNL-ன் நிலை பற்றி திருச்சி N..சிவா,M.P அவர்களின் உரை:

தன்னுடைய புகழை தக்கவைக்கும் வல்லமையுடன் BSNL உள்ளதுஅதற்கான கட்டமைப்பும்மனித சக்தியும் அதற்கு உள்ளது. BSNL-ன் பெருமையை குலைக்கும்தீய உள்நோக்கத்துடன்       BSNL பற்றிநலிவடைந்துவிட்டதுஆரம்பநிலை புற்றுநோய்நட்டம் ஏற்படுத்தும் தொழிற் நிறுவனம் என்பது போன்ற தவறானகருத்துக்களை ஊடகங்கள் குறிப்பிட்டு வருகின்றனஅதோடு மட்டுமல்ல, BSNL தனியார்மயமாகப் போகிறதுஅல்லது BSNL- மூடப் போகிறார்கள் போன்றதவறான குறிப்புகளை பொதுமக்களீடம் தருகிறார்கள்தொலைத்தொடர்பு அமைச்சர் BSNL-  சீரமைக்கும் திட்டத்தில் இருந்தாலும்இந்த ஊடகங்களின்பரப்புரையை அரசும் விரும்புகிறது.
     
        கேன்சர் போன்ற நோயுற்ற நிலையிலா  BSNL உள்ளதுஇல்லைஇன்னும் BSNL தனது கட்டமைப்புதிடத்தன்மைஅதற்கெனவே பாடுபடும் ஊழியர்கள்,ஒவ்வொரு மாதமும் உயர்ந்துவரும் கைப்பேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கொண்டே விளங்குகிறது.
    
       31-03-2019 வரையிலான சில விபரங்களை தெரிந்துகொள்வோம்:

சொத்துக்கள் :

·         11.56 கோடி கைப்பேசி வாடிக்கையாளர்கள், 1.11 கோடி தொலைபேசி ஆக மொத்தம் 12.68 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ( இதில் 3.94 கோடிகிராமப்புற தொலைபேசி வாடிக்கையாளர்களும் அடங்குவர்.)  பிராட்பேண்ட் மற்றும் ADSL, FTTH, Wi-max, Wi-fi          உள்ளிட்ட சேவைகளுக்கு 2.15 கோடிவாடிக்கையாளர்களும் உள்ளனர்..
·         32,760 தொலைபேசி நிலையங்கள் ( கிராமப்புறத்தில் 24,029, நகர்புறத்தில் 8,641 நிலையங்கள்)   OFC வலைத்தளச் சேவையை 8.49 லட்சம் கிலோ மீட்டர்வழித்தடங்கலில் தருகிறது.  2548 கி.மீ மைக்கரோ அலைவழிச் சேவை, 95 சாட்டிலைட் மையங்களும் 67,618 டவர்களும் உள்ளன.
·         கிராமப்புறநகர்புறங்களில் 2G 3G சேவைக்காக GSM BTS 1,46,065 உள்ளது. 6,383 நகரங்களில் 3G  சேவை தரப்படுகிறது.
·         1,32,229 கிராமங்களுக்கு  தொலைத்தொடர்பு இணப்பு தரப்பட்டுள்ளது. GSM & தொலைபேசி இணைந்த வெளிச் சந்தையில் 10.58% பங்கு ( 4-வது இடத்தில்,அதாவது வோடாபோன் --ஐடியாபாரதி-ஏர்டெல்ரிலையன்ஸ்-ஜியொ-வுக்குப் பிறகு)
·         ஊழியர்கள் எண்ணிக்கை = 1,66,974  அதில் 2018-2019-ல் ஊழியர்கள் குறைவு= 16,548.
·         தோராயமாக நிலம்கட்டிடங்களின் மதிப்பு பல லட்சம் கோடி ரூபாயாகும்.
·         முக்கியமான மையப்பகுதிகளில் ஊழியர் குடியிருப்புகள் உள்ளது,
·          மேற்கு வங்கம்மத்திய பிரதேஷ்சத்தீஸ்கர்மும்பை ஆகிய மாநிலங்களில் 7 டெலிகாம் தொழிற்சாலைகள் உள்ளனகாசியாபாத் மற்றும் ஜெபல்பூரீல்நவீனமயமாக்கப்பட்ட 2 பயிற்சி மையங்கள் உள்ளது. 20 RTTC-க்கள்,  CTTC-க்கள் ( பயிற்சி மையங்கள் ) உள்ளது.

·         ரயில்வேயை தவிர்த்து இந்தியாவில் வேறு எந்த நிலையான நிறுவனங்களுக்கும் இவ்வளவு அதிகமான நிலங்கள்கட்டிடங்கள் அடங்கிய சொத்துக்கள்கிடையாது.
               
 ரிலையன்ஸ்-ஜியொ-வைத் தவிர்த்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் வாடிக்கையாளர்களை இழந்து வரும் நிலையில், BSNL மட்டும் ஒவ்வொருமாதமும் கைப்பேசி இணைப்புகள் அதிகரித்து வருகின்றன.



வருவாய்செலவினம்நட்டம்மதிப்புக்குறைவு எவ்வளவு ? - விபரம் :

வருடம்
வருவாய்
செலவினம்
நட்டம்
மதிப்புக்குறைவு
2013 -14
27,996 கோடி
34,930 கோடி
7,020 கோடி
6,023 கோடி
2014 -15
28,645  ‘’
37,292   ‘’
8,234    ‘’
8,817   ‘’
2015 -16
32,411  ’’
37,270   ‘’
4,859    ‘’
7,206   ’’
2016 -17
31,533  ‘’
36,327   ‘’
4,793    ‘’
6,330   ‘’
2017 -18
25,071  ‘’
33,808   ‘’
7,993    ‘’
5,832   ‘’

செலவினங்களில் மதிப்பீட்டுக் குறைவான தொகை கணக்கீட்டினால் தான் நட்டம் தெரிகிறது.  இது சரியான செலவினம் அல்லமாறாகநிலம்கட்டிடம் மீதானசதவீத மதிப்பீட்டு குறைவான கணக்கினால் ஏற்பட்டதுமதிப்பீட்டுக் குறைவை நீக்கி உண்மையான செலவினத்தை கணக்கில் கொண்டால்நட்டம் என்பதுகுறைந்தபட்சமே.

10,000 முதல் 17,000 ஊழியர்கள் வருடந்தோறும் பணி ஓய்வு பெறுவதாலும்பணி ஓய்வு பெற்ற இடத்தில் வேறு ஊழியர் நியமிக்காததாலும்ஊழியர்களின்சம்பளம் உயர்த்தப்படாமல்நிலையானதாகவே இருந்தது.
     
4G  ஸ்பெக்ட்ரம் சேவை அளிக்கப்படாததாலும்,  DOT- யிலுருந்து 14,000 கோடி BSNL-க்கு திருப்பித் தராததாலும்உயர்த்தப்பட்ட பென்சன் பங்களிப்புத் தொகையைBSNL--க்கு திருப்பித் தராததாலும், 2000-த்தில் பொதுத்துறையாகும் நேரத்தில் இருந்த நிதிக்கடன் பற்றி அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததாலும், BSNLநட்டத்தில் செல்லவேண்டிய காரணமாக அமைந்தது.

     மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள்ஒவ்வொன்றும் ஒரு லட்சம் கோடிக்குள் உள்ள நிலையில், BSNL-ன் கடன் வெறும் 14,000 கோடி தான்இந்த கொள்ளைவிலை மற்றும் விதிகளை மீறிய ரிலையன்ஸ்-ஜியோ செயல்களால் அனைத்து நிறுவனங்களும் நட்டத்தில் செல்லக் காரணமாக அமைந்தது.

     நிதி அயோக்கின் பரிந்துறைப்படிஒவ்வொரு பொதுத்துறை நிறுவனங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக தனியார் மயமாக்குதல் அல்லது மூடிவிடுவது என்பதுஅரசின் கொள்கை முடிவாக உள்ளதுலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு தருவதைமூடப்படுவதைப் பற்றிபொதுமக்களிடமிருந்து கேள்விகள் எழும்அதனால்தனியார் மயமாக்கும் முன்பாகவும்மூடப்படும் நிலைக்கு முன்பாகவும் BSNL -நிறுவனத்தைநட்டமடையச் செய்தால்தான் தனியாருக்கு மாற்றவோவிற்கவோ பொதுமக்களிடமிருந்து கேள்விகள் எழாதுவிருப்ப ஓய்வு திட்டம் ( VRS  ) என்பதுசேவையை சீரழிக்கும் மற்றொரு ஆயுதம்இதைத்தான்  BSNL-ல் அமல்படுத்த அரசு நினைக்கிறதுஇதைப் போராடியே தோற்கடிக்கமுடியும்.
                                
      BSNL/MTNL-களை தனியார் மயமாக்குவதோ அல்லது மூடுவதோதொலைபேசி சேவைக்கு வாடகைமற்றும் கட்டணங்களை உயர்த்தவே வழி வகுக்கும்என்பதை வாடிக்கையாளர்களும்பொதுமக்களும் நன்கு அறிவார்கள்பெட்ரோல் விலை தினம் தினம் உயர்வது போலதொலைபேசி கட்டணங்களும்தினசரி உயரும்இது அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களில் உள்ள 120 கோடி வாடிக்கையாளர்களை பாதிக்கும்.
      வேலை செய்வோரும்அதிகபட்ச சேவை தருவதன் மூலம்பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு உறுதிபடுத்தப்படும். BSNL-ஊழியர்கள் மற்றஊழியர்களைக் காட்டிலும் நல்ல சம்பளம் பெரும்போது அவர்களின் சேவை மேலும் சிறப்பாக அமையவேண்டும்.  BSNL  ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்டநியாயமான கோரிக்கைகள்அதற்கான போராட்டங்களும் நடந்தனஆனால், BSNL- நிலைநிறுத்த செய்யும் முயற்சி ஒன்றே ஊழியர்களின் உடனடி தேவையானமுக்கியமான ஒன்றாகிவிட்டது.

     மேலே குறிப்பிட்டபடி BSNL நலிந்து போகவும் இல்லைதேவையில்லாமலும் போகவில்லைஉலகின் 7-வது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற புகழ்பெற்றநிலையை மறுபடியும் நிலைநிறுத்தமுடியும்.
    
வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேவை செய்யவும் , BSNL  வலிமையாகவும்திறம்பட்ட அமைப்பாகவும் அமைய பொதுமக்கள் முழு ஆதரவு தர வேண்டும்.
==================================================================================================
தமிழாக்கம்  = .அன்பழகன்மாவட்டச் செயலர்,
              அகில இந்திய BSNL ஓய்வூதியர் நலச் சங்கம்புதுச்சேரி       22-07-2019

 தோழர்களே, அனைத்திந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கத்தின் புதுச்சேரி மாவட்டத்தின் சார்பில் இன்று  21.12.2023 ஓய்வூதியர் தினம் மிகச் ...