Saturday, August 11, 2018

புதுச்சேரி பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் மாதாந்திர கூட்டம்

இன்று 11. 8. 2018 இரண்டாம் சனிக்கிழமை புதுச்சேரி பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் மாதாந்திர கூட்டம் புதுச்சேரி தொலைபேசி நிலைய மனமகிழ் மன்றத்தில்  இனிதாக நடைபெற்றது. காலை சரியாக பத்து முப்பதுக்கு கூட்டம் துவங்கியது. எண்பது தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர். தோழர் K.R.சிவகுமார் மாவட்ட தலைவர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது .முதலில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் தோழர் R.மோகன்ராஐ் மறைவையொட்டி அனைத்து தோழர்களும் தோழியர்களும் 2 நிமிடம் மௌனம் காத்து இதயபூர்வமான அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு தோழர்கள் V. குணசேகரன், பட்டாபி,பால்ராஐ்,மூத்த தோழர் ஏசு,முன்னாள் மாநில உதவி பொருளாளர் சதாசிவம்,முனுசாமி,வைத்திலிங்கன், மாவட்ட தலைவர் சிவகுமார் ,மாவட்ட செயலர் அன்பழகன் ஆகியோர் மறைந்த முதல்வர் கலைஞர்  அவர்களுக்கு புகழ் அஞ்சலி செய்தார்கள் .மாவட்ட செயலர் அன்பழகன் தனது உரையில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளை ஒன்றுவிடாமல் தொகுத்து வழங்கி அங்கு நடைபெற்ற முக்கிய தலைவர்களின் உரையையும் மாநாட்டில் வரவேற்புரை வழங்கிய மருத்துவர் செந்தில் குமார் நல்லுசாமி அவர்களின் வரவேற்பு உரையையும் இதயம் சம்பந்தமாக தொகுத்து வழங்கிய காணொளி காட்சி உரையையும் பற்றி விளக்கமான செய்திகளையும் தெரிவித்தார் .முன்னாள் மாநில உதவி பொருளாளர் சதாசிவம்  BSNL வளர்சிக்கான  கருத்தரங்கை நடத்துவதற்கான அவசியத்தை வலியுறித்தினார்.மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் எம்.சாம்பசிவம்     
கௌரவிக்கப்பட்டார்.   முன்னாள் மாநில உதவி பொருளாளர் சதாசிவம் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.தோழர் கிருஷ்ணசாமி  தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினார்.தோழர்  R.S.ராஐேந்திரன் நன்றி நவில கூட்டம் இனிதாக முடிவடைந்தது.

No comments:

Post a Comment

 தோழர்களே, அனைத்திந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கத்தின் புதுச்சேரி மாவட்டத்தின் சார்பில் இன்று  21.12.2023 ஓய்வூதியர் தினம் மிகச் ...