அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச் சங்கம்.
புதுச்சேரி மாவட்டம்
தோழர்களே, புதுவை மாவட்ட சங்கத்தின் சார்பில் ஒய்வுதியர் தின சிறப்பு கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் முப்பெரும் விழாவாக ஓய்வுதியர் தினம், அகில இந்திய மாநாட்டின் சிறப்பம்சங்களை விளக்கும் கூட்டமாகவும், புதியதாக அகில இந்திய துணை பொதுச் செயலாளராக பதவி ஏற்றிருக்கும் தோழர் பி ஜெயராமன் அவர்களை வாழ்த்தும் கூட்டமாக அமைந்தது. விழாவிற்கு தலைவர். தோழர் த.அன்பழகன் தலைமை தாங்கினார்.விழாவிற்கு தமிழ் மாநில உதவி தலைவர் தோழர். திருஞானம் அவர்களும் வந்து சிறப்பித்தார். விழாவிற்கு மகுடம் வைத்தார் போல ஓய்வு பெற்ற முதன்மை கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரி(Pr. CCA), தோழர் அழகர்சாமி அவர்கள் வந்து சிறப்பித்தார்கள்.
**** தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் தோழர்.செல்வரங்கம் மாவட்ட உதவி செயலர் அஞ்சலி உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து தலைமை உரையை தோழர் அன்பழகன், மாவட்டத் தலைவர் அவர்களும் வரவேற்புரையை தோழர் ஹரிஹரன் மாவட்ட செயலர் அவர்களும் நிகழ்த்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து அகில இந்திய துணை பொது செயலாளர் பி ஜெயராமன் அவர்களும், மாநில உதவி தலைவர் தோழர் திருஞானம் அவர்களும், Pr. CCA தோழர் அழகர்சாமி அவர்களும், மாநில அமைப்பு செயலர் தோழர் சாம்பசிவம் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.
**** ஓய்வுதியர் தினத்தைப் பற்றியும், தோழர் பி ஜெயராமன் அவர்களை வாழ்த்தியும் கீழ்கண்ட தோழர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
1. தோழர் த.அன்பழகன்
2. தோழர் கி.அசோக ராஜன்
3. தோழர் ப.காமராஜ்
4. தோழர் எஸ்.சதாசிவம்
5. தோழர் எம் வி ராமகிருஷ்ணன்
6. தோழர் நா. முனுசாமி.
7. தோழர் ஏசு
8. தோழர் தங்கமணி
9. தோழர் பட்டாபி.
*** தோழர் மு.சாம்பசிவம், தமிழ் மாநில அமைப்புச் செயலர், வாழ்த்துரையுடன், அகில இந்திய மாநாட்டின் நிகழ்வுகளையும்
எடுத்துரைத்தார்.
**** தோழர் அழகர்சாமி Pr. CCA rtd., தோழர் ஜெயராமன் அவர்களின் சிறப்பான செயல்பாட்டினை நினைவு கூர்ந்தார். மேலும் நமது சங்கம் மேன்மேலும் வளர வாழ்த்து வழங்கினார்.
ஏற்புறையில் தோழர்
பி. ஜெயராமன் அகில இந்திய துணை பொதுச்செயலாளர் பேசுகையில், இயக்க வரலாற்றையும் தலைவர்களின் தியாகத்தையும் நினைவு படுத்தினார். அழகர்சாமி, Pr. CCA அவர்கள் பல பிரச்சனைகளை சாதுரியமாக தீர்த்து வைத்ததை நினைவு கூர்ந்தார். தோழர் பிச்சுமணி தோழர் பாலகிருஷ்ணன், மற்றும் தோழர் KJ ஜாய் அவர்களுடன் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்தார்.
*** மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக பிஎஸ்என்எல் ஊழியர்களும் DCRG, COMMUTATION, PENSION ஆகியவற்றைபெற்றதை நினைவு கூர்ந்தார்.60:40 என்ற அரசாங்கத்தின் கண்டிஷனை உடைத்ததையும் பெருமையுடன் கூறினார். CGHS இன் சிறப்பம்சங்களை கூறியதுடன், ஏழாவது சம்பள குழு அடிப்படையில் நமது ஓய்வு ஊதிய மாற்றம் அமையும் என்று கூறினார்.
*** தோழர் இரவணையா மாவட்ட உதவி செயலர் அவர்கள் நன்றி கூற விழா இனிதே முடிவற்றது.
கடந்த மாவட்ட மாநாட்டில் நன்கொடை அளித்த தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் பங்கு பெற்ற அனைத்து தோழர்களுக்கும் பெரும் எண்ணிக்கையில் பங்குபெற்ற மகளிருக்கும், மாவட்ட சங்கத்தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
அ. ஹரிஹரன்,
மாவட்டச் செயலர்.
புதுச்சேரி மாவட்டம்.