Saturday, December 24, 2022

பென்ஷனர் தினம் சிறப்பு கூட்டம் 24-12-2022

 அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச் சங்கம்.

 புதுச்சேரி மாவட்டம்


தோழர்களே, புதுவை மாவட்ட சங்கத்தின் சார்பில்  ஒய்வுதியர் தின சிறப்பு கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் முப்பெரும் விழாவாக ஓய்வுதியர் தினம், அகில இந்திய மாநாட்டின்  சிறப்பம்சங்களை விளக்கும் கூட்டமாகவும், புதியதாக அகில இந்திய துணை பொதுச் செயலாளராக பதவி ஏற்றிருக்கும் தோழர் பி ஜெயராமன் அவர்களை வாழ்த்தும் கூட்டமாக அமைந்தது. விழாவிற்கு தலைவர். தோழர் த.அன்பழகன் தலைமை தாங்கினார்.விழாவிற்கு தமிழ் மாநில உதவி தலைவர் தோழர். திருஞானம் அவர்களும் வந்து சிறப்பித்தார். விழாவிற்கு மகுடம் வைத்தார் போல ஓய்வு பெற்ற முதன்மை கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரி(Pr. CCA), தோழர் அழகர்சாமி அவர்கள் வந்து சிறப்பித்தார்கள்.


**** தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில்  தோழர்.செல்வரங்கம் மாவட்ட உதவி செயலர் அஞ்சலி உரையாற்றினார்.


 அதைத் தொடர்ந்து தலைமை உரையை தோழர் அன்பழகன், மாவட்டத் தலைவர் அவர்களும் வரவேற்புரையை தோழர் ஹரிஹரன் மாவட்ட செயலர் அவர்களும் நிகழ்த்தினார்கள்.


 இதனைத் தொடர்ந்து அகில இந்திய துணை பொது செயலாளர் பி ஜெயராமன் அவர்களும், மாநில உதவி தலைவர் தோழர் திருஞானம் அவர்களும், Pr. CCA தோழர் அழகர்சாமி அவர்களும், மாநில அமைப்பு செயலர் தோழர் சாம்பசிவம் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.


**** ஓய்வுதியர் தினத்தைப் பற்றியும், தோழர் பி ஜெயராமன் அவர்களை வாழ்த்தியும் கீழ்கண்ட தோழர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

1. தோழர்  த.அன்பழகன்

2. தோழர் கி.அசோக ராஜன்

3. தோழர் ப.காமராஜ்

4. தோழர் எஸ்.சதாசிவம்

5. தோழர் எம் வி ராமகிருஷ்ணன்

6. தோழர் நா. முனுசாமி.

7. தோழர் ஏசு

8. தோழர் தங்கமணி

9. தோழர் பட்டாபி.


*** தோழர் மு.சாம்பசிவம், தமிழ் மாநில அமைப்புச் செயலர், வாழ்த்துரையுடன், அகில இந்திய மாநாட்டின் நிகழ்வுகளையும்

எடுத்துரைத்தார்.


**** தோழர் அழகர்சாமி Pr. CCA rtd., தோழர் ஜெயராமன் அவர்களின் சிறப்பான செயல்பாட்டினை நினைவு கூர்ந்தார். மேலும் நமது சங்கம் மேன்மேலும் வளர வாழ்த்து வழங்கினார்.


 ஏற்புறையில் தோழர்

 பி. ஜெயராமன் அகில இந்திய துணை பொதுச்செயலாளர் பேசுகையில், இயக்க வரலாற்றையும் தலைவர்களின் தியாகத்தையும் நினைவு படுத்தினார். அழகர்சாமி, Pr. CCA அவர்கள் பல பிரச்சனைகளை சாதுரியமாக தீர்த்து வைத்ததை நினைவு கூர்ந்தார். தோழர் பிச்சுமணி தோழர் பாலகிருஷ்ணன், மற்றும் தோழர்  KJ ஜாய் அவர்களுடன் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்தார்.


*** மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக பிஎஸ்என்எல் ஊழியர்களும் DCRG, COMMUTATION, PENSION ஆகியவற்றைபெற்றதை நினைவு கூர்ந்தார்.60:40 என்ற அரசாங்கத்தின் கண்டிஷனை  உடைத்ததையும் பெருமையுடன் கூறினார். CGHS இன் சிறப்பம்சங்களை கூறியதுடன், ஏழாவது சம்பள குழு அடிப்படையில் நமது ஓய்வு ஊதிய மாற்றம் அமையும் என்று கூறினார்.


*** தோழர் இரவணையா மாவட்ட உதவி செயலர் அவர்கள் நன்றி கூற விழா இனிதே முடிவற்றது.


கடந்த மாவட்ட மாநாட்டில் நன்கொடை அளித்த தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.


 விழாவில் பங்கு பெற்ற அனைத்து தோழர்களுக்கும்  பெரும் எண்ணிக்கையில் பங்குபெற்ற மகளிருக்கும், மாவட்ட சங்கத்தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


தோழமையுடன்,

அ. ஹரிஹரன்,

 மாவட்டச் செயலர்.

புதுச்சேரி மாவட்டம்.























Monday, December 19, 2022

19-12-2022 ஆர்ப்பாட்டம்

 அகில இந்திய சங்கத்தின் அறைகூவலின்  படி முதற்கட்டமாக ஆர்ப்பாட்டம் இன்று புதுச்சேரியில் GM அலுவலகம் முன்பு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் தோழர் அன்பழகன் அவர்கள் தலைமை தாங்க, மாவட்ட செயலர் ஹரிஹரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.


தொடர்ந்து கீழ்க்கண்ட தோழர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

1. எம் சாம்பசிவம், மாநில அமைப்பு செயலாளர்.

2. சதாசிவம், மாவட்ட உதவி செயலர்.

3. கே அசோக ராஜன், மாவட்ட உதவி செயலர்.

4. எம் தண்டபாணி மாவட்ட உதவி தலைவர்.

5. கே ஆர் ரவிச்சந்திரன் மாவட்ட உதவி தலைவர்.

6. எம்வி. ராமகிருஷ்ணன் தணிக்கையாளர்.

7. தோழர் பட்டாபி, மூத்த தோழர்.


தோழர் அசோக ராஜன் , கே ஆர் ரவிச்சந்திரன் மற்றும் தோழர் பட்டாபி  அவர்களின் விண் அதிரும் கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


 தோழர் ரவனையா, மாவட்ட உதவி செயலர் நன்றி கூற ஆர்ப்பாட்டம் இனிதே நிறைவு பெற்றது.

 தோழமையுடன்,

அ. ஹரிஹரன், மாவட்ட செயலர்.

Sunday, December 18, 2022

19-12-2022 ஆர்ப்பாட்டம்











 

ஆர்ப்பாட்டம்

 தோழர்களே நமது அகில இந்திய மாநாட்டின் முடிவின்படி ஓய்வூதிய மாற்றம்கோரி அறிவிக்கப்பட்ட பல கட்ட நடவடிக்கைகளில் முதலாவதாக, ஆர்ப்பாட்டம் வரும் 19/12/2022  ( திங்கள் கிழமை ) காலை 10 மணி அளவில், புதுச்சேரி தொலைபேசி நிலைய  வாயிலில் தலைவர் தோழர் த.அன்பழகன் அவர்கள் தலைமையில்  நடைபெறும். தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்குமாறு மாவட்ட சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தோழமையுடன் ஹரிஹரன், மாவட்டச் செயலர்.

 18/12/ 2022.

Saturday, December 10, 2022

விசாகப்பட்டிணம் அகில இந்திய மாநாடு

 தோழர்களே நமது அகில இந்திய மாநாடு விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 2  மற்றும் 3 தேதிகளில், புதுவை சார்பாக 7 சார்பாளர்களுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

- தேசியக்கொடி மற்றும் சம்மேளன கொடிகள் மூத்த தோழர்களால் உயர்த்தப்பட்டது.

- தோழர் பக்ஷி,  தலைவர்,RTOWA, NewDelhi, மற்றும் சம்மேளன தலைவர், உதவி தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைக்க  மாநாடு இனிதே தொடங்கியது.

- மாநாட்டில் தோழர் ராமன் குட்டி,தலைவர் அவர்கள் பேசுகையில், AIBSNLPWA ஒரு ரெயின்போ அசோசியேசன்,2009 ல் அமைக்கப்பட்டது. இதுவரை 70 ஆயிரம் ஆயுள்  உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய ஒரு அசோசியேசன்.78.2% மற்றும் 60:40 தீர்வு ஆகியவற்றை வெற்றிகரமாக செய்த பெருமை நமது அசோசியேஷன் சாரும் என்று கூறினார். பென்ஷன் சம்பளம் மாற்றத்திலிருந்து  விடுபட்டு ஓய்வூதிய மாற்றம் கிடைக்க தொடர்ந்து போராடுவோம் என்று உறுதி கூறினார்.

-2011 ல் தொடங்கப்பட்ட பென்ஷனர் பத்திரிகை, இதுவரை 57 பதிப்புகளை வெளியிட்டுள்ளது என்று கூறினார்.


* தோழர் D. கோபாலகிருஷ்ணன் உதவி தலைவர்  அவர்கள் முதலாவதாக விசாகப்பட்டினம் ரிசப்ஷன் கமிட்டியை பாராட்டினார்.

- நமது சங்கம் தொடர்ந்து DOT ஐ அணுகி அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளது என்று பெருமையுடன் கூறினார். 20 ஆண்டுகாலமாக இருந்த பென்ஷன் நிலுவை பெற்றுத் தந்தது  மிகச் சிறப்பு  என்று கூறினார்.

-VRS ல் சென்றவர்களுக்கு, சம்பள பட்டுவாடா BSNL தாமதப்படுத்திய போதும், ப்ரொவிஷனல் பென்ஷன் அனைத்து ஓய்வூதியர்களுக்கும்  Feb 2020, மாதக் கடைசியில் பெற்றுத் தந்தது அதற்காக முன் கை எடுத்ததைப் பற்றி கூறினார்.

-VRS 2019 ஓய் ஊதியர்கள் மிகப் பெரும்பான்மையான ஊழியர்களை நமது சங்கத்தில் இணைத்ததை பெருமையுடன் கூறினார்.

- ஏழாவது சம்பள குழு அடிப்படையில், பென்ஷன் மாற்றம் பெறுவது நமது கடமை என்று கூறினார்.

- பூரி மாநாட்டுக்குப் பிறகு ஆறு முறை DOT மற்றும் அமைச்சர்களை சந்தித்ததையும்,டாக்குமெண்டரி எவிடென்ஸ் உடன் தொடர்ந்து கடிதம் எழுதியதையும் குறிப்பிட்டார்.

- அதன் அடிப்படையில் மெம்பர் சர்வீசஸ், Delink ஆதரவாகவும், 0% fitment இல்லை எனவும் உறுதி கூறியதை நினைவு படுத்தினார்.

- நாம் தொடர்ந்து ஏழாவது சம்பள குழுவின் அடிப்படையில் ஓய்வூதிய மாற்றத்திற்கு உறுதியாக நிற்பதாக கூறினார். அகில இந்திய மாநாடும் இதனை ஒருமனதாக ஏற்றுக் கொண்டது.


 ==தோழர் கங்காதராவ் பொதுச் செயலாளர், பேசுகையில், CGHS பற்றி விரிவாக விள க்கியதுடன், நமது சங்கம் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக அரசாங்கம் அறிவித்துள்ளதை பெருமையுடன் கூறினார். இதன் காரணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள் கிடைக்கும் என்று கூறினார் 

1. Grant-in-Aid

2. நம்முடைய கருத்துக்களை கூறும் உரிமை.

3.DOP&PW நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் உரிமை.

4.DLC  முகாம் நடத்தும்உரிமை.


- இதுவரை உள்ள 22 whatsapp குரூப்பில் 10 குரூப் மட்டுமே live ஆக உள்ளது என்றும் கூறினார்.


 அகில இந்திய மாநாட்டில்

தோழர்.D. கோபாலகிருஷ்ணன், தலைவராகவும்,

தோழர் வரப் பிரசாதராவ், பொதுச் செயலாளராகவும்,

தோழர் விட்டோபன், பொருளாளராகவும், ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 கடலூர்  தோழர் பி. ஜெயராமன் அவர்கள் உதவி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


 புதுவை மாவட்டத்தின் சார்பாக வந்திருந்த அனைத்து சார்பாளர்களுக்கும், உடன் கலந்து கொண்ட தோழர்களுக்கும், அனைத்து புதுவை தோழர்களுக்கும் மாவட்டச் சங்கத்தின் சார்பில்  நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.டிசம்பர் 2 -3 ஆகிய தினங்களில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில், உதவித் தலைவர்  தோழர் முத்தியாலு அவர்களின் சீரிய சொற்பொழிவு :


* கடந்த அகில இந்திய மாநாடு ஒரிசாவில் நடைபெற்ற போது நம்முடைய உறுப்பினர் எண்ணிக்கை 44,000. ஆனால் தற்போது எண்ணிக்கை 66,000. நான்கு ஆண்டுகளில் உறுப்பினர் எண்ணிக்கை 22,000 உயர்ந்துள்ளது. கோவிட் பாதிப்பிலும் உறுப்பினர் எண்ணிக்கை உயர காரணமாக இருந்த கிளை, மாவட்ட, மாநில சங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.


** மொத்தம் உள்ள 66,000 உறுப்பினர்களில், தென் மாநிலங்கள் மற்றும் 49000 உறுப்பினர்களை கொண்டுள்ளது. மற்ற 16 மாநிலங்களில் மொத்த எண்ணிக்கை  17000. அம் மாநிலங்களில் நாம் கூடுதல் கவனம் செலுத்தி மேலும் உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்று கூறினார்.

*** இமாச்சலப் பிரதேசத் தில் நமது சங்கம் புதியதாக உருவாகியுள்ளதாகவும், ஜம்மு காஷ்மீரில் நமது அமைப்பு இல்லை என்றும் கூறினார்.


**** விருப்பஓய்வில் சென்ற 78569 ஊழியர்களில்,22953 ஊழியர்களே உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர் என்றும்,55616 ஊழியர்கள் சேர்க்கப்படவில்லை எனவும், இவர்களையும் இணைக்க நமது தோழர்கள் பாடுபட வேண்டும் என்று கூறினார்.


***** இந்தியாவிலேயே தமிழகம் அதிகபட்சமாக  15148 உறுப்பினர்களைக் கொண்டு, முதல் மாநிலமாக திகழ்கிறது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.


****** வருங்காலத்தில் நாம் AIBSNLPWA இல்லாத மாநிலம், மாவட்டம் இல்லை என்ற நிலையை உருவாக்க ஒற்றுமையுடன் பாடுபட்டு உறுப்பினர் எண்ணிக்கையை மேலும் உயர்த்தி சங்கத்தை மேலும் வலுப் பெற செய்ய வேண்டும் என்று கூறினார்.

 தோழமையுடன் ஹரிஹரன், மாவட்ட செயலர், புதுச்சேரி மாவட்டம்.


 தோழர்களே, அனைத்திந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கத்தின் புதுச்சேரி மாவட்டத்தின் சார்பில் இன்று  21.12.2023 ஓய்வூதியர் தினம் மிகச் ...