Sunday, November 18, 2018

மெடிக்கல் பில் சம்பந்தமாக STR கூட்டத்தில் கூறப்பட்ட விளக்கங்கள்


பி.எஸ்.என்.எல் தற்போது எதிர்மறையான வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது,(நஷ்டத்தில்) தொலைபேசி டவர் மற்றும் தொலைபேசி நிலையங்களுககான  கரண்ட்  பில்களை கூட செலுத்த கூடிய நிலையில் தற்போது  இல்லை. மருத்துவச் செலவினங்களைத் தீர்ப்பதற்கான கோரிக்கையில்
பின்வரும் ஆலோசனையை இயக்குநர் எச்.ஆர்.பி.எஸ்.என்.எல்  முன் வைத்தார். உட்புற சிகிச்சைக்கு சி.ஜி.ஹெ.எஸ் முறைக்கும், வெளிபுற சிகிச்சைக்கு சில விதமான முறைகளில்  காப்பீடு நிறுவனத்தில் இணைக்கவும் திட்டமிட்டுள்ளது. பி.எஸ்.என்.எல் இல் சேரும் போது ஓய்வூதியர்களின் மருத்துவ தேவைகளை கவனிப்போம் என்று உறுதியளித்த பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது பின்வாங்குகிறது.இந்த  சூழ்நிலையில் நாம் பிஎஸ்என்எல்    சார்ந்திருக்க முடியாது
சி.ஜி.எஸ்.எஸ்  மருத்துவ உதவியை பெற்றுக் கொள்ள ஒவ்வொரு  ஓய்வுதியரும்  RS 80000 / ஒரு முறை பணம் செலுத்த வேண்டும்.  BSNL அதிகாரப்பூர்வமற்ற முறையில் இந்தபணத்தை செலுத்துமாறு  நம்மை கேட்டுக் கொண்டது மேலும்  நிதி நிலைமை மேம்பட்டதும், இந்த பணத்தை திருப்பி தருவதாக  கூறுகிறது. நமது தொழிற்சங்கம் இதை  ஒப்புக் கொள்ளவில்லை


No comments:

Post a Comment

 தோழர்களே, அனைத்திந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்கத்தின் புதுச்சேரி மாவட்டத்தின் சார்பில் இன்று  21.12.2023 ஓய்வூதியர் தினம் மிகச் ...