11-03-2023 அன்று புதுவை மாவட்ட சங்கததின் சார்பில் மகளிர் தின விழா மகளிரால் சிறப்பாக, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கொண்டாடப்பட்டது.தலைவர் அன்பழகன் மற்றும் நானும் கௌரவிக்கப்பட்டோம். மாவட்ட சங்கத்தின் சார்பில் சண்முகசுந்தரம் உட்பட 10 உறுப்பினர்கள் கலந்து கொண்டோம். மகளிர்க்கு தேநீர் மற்றும் மதிய உணவு சங்கத்தால் வழங்கப்பட்டது.
கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் இவ்விழாவினை மிகச் சிறப்பாகவும் நன்றாகவும் நடைபெற்றதாகவும் இனிவரும் காலங்களிலும் இதே போல நடைபெற வேண்டும் என்றும் கூறினார்கள்.
குறிப்பாக சொல்லப்போனால் ஓய்வு பெற்ற நம்முடைய மகளிர் அனைவரும் ஒன்றாக சந்திக்கின்ற ஒரு விழாவாக இது நடைபெற்றது.
மகளிர் விழாவை வித்தியாசமான முறையில் அனைவரும் பாராட்டும் படி நடத்திய விழா குழுவிற்கும், கலந்து கொண்ட மகளிர் அனைவருக்கும், மாவட்ட சங்கத் தோழர் அனைவருக்கும், குறிப்பாக தேவையறிந்து உதவிய தோழர் சண்முகசுந்தரத்திற்கும், விழா அமைப்பிற்கும் மற்றும் புகைப்படத்திற்கும் உதவிய தோழர் ரவணையா அவர்களுக்கும், மாவட்ட சங்கத்தின் சார்பில் நெஞ்சு நிறை நன்றி. விழாவில் சங்கத்திற்கு நன்கொடை அளித்த தோழியர்களுக்கும் நன்றி.
தோழமையுடன் ஹரிஹரன், மாவட்ட செயலர்.
No comments:
Post a Comment